“ஆகாயத்தில்
ஒரு ஒளி” என்ற தொடரானது இனி உலகத்தின் உண்மை நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கபோகின்றது.
மக்களின் மனமாற்றமே யுக மாற்றத்திற்கான திறவு கோல் என்று கடவுள் கோட்பாடுகள்
கூறுகின்றன.
உலகத்தின்
படைப்பில் இயற்கை அழகானது, அதில் ஆபத்தும் உண்டு, ஆனந்தமும் உண்டு, ஆரோக்கியமும் உண்டு,
ஆனால் அதில் உள்ள உண்மைகளை மக்கள் இன்னும் அறியாமல் உள்ளனர், ஆழத்தில் பல இரகசியங்கள்
உண்டு. ஆழமென்பது இங்கு கடலின் ஆழத்தை குறிக்கும். இந்த உலகத்தில் திடீரென்று காணமல்
போன அனைத்தும் வானத்தில் மறைத்து வைக்கப்படவில்லை. ஆனால் கடலின் ஆழத்தில் பாதுகாக்கப்பட்டு
உள்ளது என இன்றைய 15 –ம் தீர்க்கதரிசனம் ஒரு உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.