Friday 28 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 13)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 13 -ம் பகுதி)

“உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்கதரிசனப் பகுதி 13-ம் பகுதி ஆகும். இந்த 13-ம் பகுதி பல நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். அவைகளைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.


13-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக இடம் பெறும் குறிப்பு என்னவெனில் “நாடாளும் மன்னன் ஒருவனின் இராஜ்யம்“ அவன் கைகளை விட்டு விலகிச் செல்லும் என்றும், ரோம் நாட்டில் நடைபெறும் ஒரு பெரும் புரட்சி இதற்கு வித்தாக அமையும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு நமக்கு தெரிவிக்கின்றது. யுதர்களின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் அளவிற்கு இப்புரட்சி அமையும் என்று இந்த தீர்க்கதரிசனம் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றது.

Friday 21 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 12)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம்  - 12-ம் பகுதி)

    “ உண்மைகள் உறங்குவதில்லை ” என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தின் பகுதியில்  இன்று  நாம் காண இருப்பது 12-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும்.
 

    இந்த 12-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது “துருக்கி நாட்டில் வரும் மாதத்தில் மிகப்பெரிய கொடிய சம்பவம் ஒன்று நடக்க இருப்பதாகவும், அச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடிய முறையில் கொல்லப்படுவார்கள்“ என்ற செய்தியை 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.

Friday 14 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 11)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 11-ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காண உள்ள தீர்க்கதரிசனப் பகுதி 11-ம் பகுதியாகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


    11-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது, வருங்காலத்தின் நிலையை “காலக்கண்ணாடியாக“ நாம் விளக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பே இப்பகுதியாகும். அதாவது உண்மைகள் உறங்குவதில்லை என்ற பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 3-ம் தீர்க்கதரிசனத்தின் அனைத்து குறிப்புகளும் தற்போது நடக்கும் காலமாக உள்ளது என்றும், இது தவறாமல் நடக்கும்  நிகழ்வுகள் என்பதை 11-ம் தீர்க்கதரிசனம் தீர்க்கமாக இங்கே குறிப்பிடுகின்றது.

Friday 7 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 10)

உண்மைகள் உறங்குவதில்லை
(10-ம் தீர்க்கதரிசனம் பகுதி)

    இன்று “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெறுவது 10-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த வருங்கால நிகழ்வுகளின் தொகுப்பே இதுவாகும்.


    10-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண உள்ள தீர்க்கதரிசனம் என்னவெனில் “வானில்“ ஆளில்லாத ஒரு விமானம் நமது இந்திய வான் எல்லையில் திடீரென்று வட்டமிடும் என்றும், அதனை நமது ராணுவம் கண்டறிய முற்படும் சமயத்தில் அது திடீரென்று மறைந்துவிடும் என்றும், இது சமீபகால நிகழ்வாக நடக்க இருப்பதாகவும், இச்சம்பவம் பலமுறை இந்திய தேசத்தின் எல்லைப் பகுதியில் நடக்கும் என்றும், இது இந்திய மக்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாக அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு நமக்கு முக்கிய குறிப்பை தருகின்றது.