Friday 18 August 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 16)

 உண்மைகள் உறங்குவதில்லை
 (தீர்க்கதரிசனம் 16-ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனம் 16-ம் பகுதியாகும். இந்த 16-ம் தீர்க்கதரிசனப் பகுதியோடு “உண்மைகள் உறங்குவதில்லை“ தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவு பெறுகின்றன. அடுத்த தீர்க்கதரிசனப் பகுதியானது 6-ம் மாதம் முடிந்தபின் வெளிவரும் என்பதை 16-ம் தீர்க்கதரிசனம் மக்களுக்கு இங்கே சுட்டிக் காட்டுகின்றது.

 

    இந்த 16-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் முதலாவதாக காண இருப்பது என்னவெனில் இந்தியா - சீனா உறவுக்குள் பெரும் இடைவெளி தற்போது ஏற்பட உள்ளதாகவும், வரும் மாதத்தில் ஒரு சிறிய அளவில் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும், அச்சமயத்தில் சீனா தன் கோபத்தை திபெத் மீது காட்டும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Friday 11 August 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 15)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 15-ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெற உள்ள தீர்க்கதரிசனம் 15-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 15-ம் தீர்க்கதரிசனம் பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


    இன்று இந்த 15-ம் தீர்க்கதரிசனத்தில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் தீர்க்கதரிசனம் என்னவெனில் தமிழகத்தில் மழையின் தீவிரமும், பல நோய்களின் தாக்கமும் மக்கள் மீது பலத்த சேதங்களை உருவாக்க உள்ளதாகவும், நடப்பு மாதமான ஆகஸ்டு 15 முதல் ஏப்ரல் 2018 வரை இதன் தீவிரம், பகுதி பகுதியாக நிகழும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மிக, மிக முக்கியமான ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.

Friday 4 August 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 14)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் - 14ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனம் 14-ம் பகுதியாகும். இந்த 14-ம் தீர்க்கதரிசனம் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


    32-ம் தீர்க்கதரிசனமான நமது “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள முக்கிய நிகழ்வு ஒன்று தற்போது தமிழகத்தில் கால தாமதமின்றி நடைபெறும் என்றும், அப்பொழுது பொள்ளாச்சி பகுதியில் பூமி சம்பந்தப்பட்ட திரட்டு ஒன்று வெளிவரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு வர உள்ள பேராபத்து ஒன்றின் அறிகுறியாக இதனை கருத வேண்டும் என்று 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

Friday 28 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 13)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 13 -ம் பகுதி)

“உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்கதரிசனப் பகுதி 13-ம் பகுதி ஆகும். இந்த 13-ம் பகுதி பல நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். அவைகளைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.


13-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக இடம் பெறும் குறிப்பு என்னவெனில் “நாடாளும் மன்னன் ஒருவனின் இராஜ்யம்“ அவன் கைகளை விட்டு விலகிச் செல்லும் என்றும், ரோம் நாட்டில் நடைபெறும் ஒரு பெரும் புரட்சி இதற்கு வித்தாக அமையும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு நமக்கு தெரிவிக்கின்றது. யுதர்களின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் அளவிற்கு இப்புரட்சி அமையும் என்று இந்த தீர்க்கதரிசனம் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றது.

Friday 21 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 12)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம்  - 12-ம் பகுதி)

    “ உண்மைகள் உறங்குவதில்லை ” என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தின் பகுதியில்  இன்று  நாம் காண இருப்பது 12-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும்.
 

    இந்த 12-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது “துருக்கி நாட்டில் வரும் மாதத்தில் மிகப்பெரிய கொடிய சம்பவம் ஒன்று நடக்க இருப்பதாகவும், அச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடிய முறையில் கொல்லப்படுவார்கள்“ என்ற செய்தியை 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.

Friday 14 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 11)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 11-ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காண உள்ள தீர்க்கதரிசனப் பகுதி 11-ம் பகுதியாகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


    11-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது, வருங்காலத்தின் நிலையை “காலக்கண்ணாடியாக“ நாம் விளக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பே இப்பகுதியாகும். அதாவது உண்மைகள் உறங்குவதில்லை என்ற பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 3-ம் தீர்க்கதரிசனத்தின் அனைத்து குறிப்புகளும் தற்போது நடக்கும் காலமாக உள்ளது என்றும், இது தவறாமல் நடக்கும்  நிகழ்வுகள் என்பதை 11-ம் தீர்க்கதரிசனம் தீர்க்கமாக இங்கே குறிப்பிடுகின்றது.

Friday 7 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 10)

உண்மைகள் உறங்குவதில்லை
(10-ம் தீர்க்கதரிசனம் பகுதி)

    இன்று “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெறுவது 10-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த வருங்கால நிகழ்வுகளின் தொகுப்பே இதுவாகும்.


    10-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண உள்ள தீர்க்கதரிசனம் என்னவெனில் “வானில்“ ஆளில்லாத ஒரு விமானம் நமது இந்திய வான் எல்லையில் திடீரென்று வட்டமிடும் என்றும், அதனை நமது ராணுவம் கண்டறிய முற்படும் சமயத்தில் அது திடீரென்று மறைந்துவிடும் என்றும், இது சமீபகால நிகழ்வாக நடக்க இருப்பதாகவும், இச்சம்பவம் பலமுறை இந்திய தேசத்தின் எல்லைப் பகுதியில் நடக்கும் என்றும், இது இந்திய மக்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாக அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு நமக்கு முக்கிய குறிப்பை தருகின்றது.

Friday 30 June 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 9)

உண்மைகள் உறங்குவதில்லை
(9-ம் தீர்க்கதரிசனம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெறுவது 9-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற உள்ள குறிப்புகள் யாவும் அதிவிரைவாக நடக்ககூடிய சம்பவங்களின் தொகுப்பே இப்பகுதியாகும்.


    9-ம் தீர்க்கதரிசனத்தில் நாம் முதலாவதாக காண இருப்பது “வருங்காலம்“ என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் வருந்தத்தக்க பல அரசியல் சம்பவங்களின் பின்னணியை கொண்ட சம்பவங்களின் தொகுப்பாக அது இருக்கிறது என்றும், அதில் மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மரணம் உடனே நிகழ இருப்பதாகவும், அது நிகழ்ந்த 7-ம் தினத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு அழிவுச் சம்பவம் நிகழ உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் தனது முதல் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

Friday 23 June 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 8)

உண்மைகள் உறங்குவதில்லை
(8-ம் தீர்க்கதரிசனப் பகுதி)

     “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற  இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெற உள்ள தீர்க்கதரிசனப் பகுதி 8-ம் பகுதி ஆகும். இது பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாக இங்கு வெளிப்படுத்தப்பட உள்ளது.


    அதாவது இன்று இடம்பெறும் 8-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக இடம்பெற உள்ள தீர்க்க தரிசனம் என்னவெனில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்கதரிசனத்தில் நாம்  வெளியிட்டுள்ள 31-ம் தீர்க்கதரிசனத்தை நாம் முழுமையாக நினைவில்  கொள்ள வேண்டும் எனவும், இச்சமயத்தில் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய பூமி திரட்டு ஒன்று தஞ்சையில் கண்டெடுக்கப்பட உள்ளதாக 8-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


Friday 16 June 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 7)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் பகுதி - 7)

    “உண்மைகள் உறங்குவதில்லை”  என்ற இந்த தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்கதரிசனம் 7-ம் பகுதியாகும். இந்த 7-ம் தீர்க்கதரிசனம் உலகத்தில் இனி நடக்ககூடிய பல சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உள்ளது.



    இந்த 7-ம் தீர்க்க தரிசனத்தில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள இருப்பது என்னவெனில் அமெரிக்க நாட்டில் உள்ள தென் மாகாணத்தில் பல திடீர் சம்பவங்கள் தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட உள்ளதாகவும், “வாட்டிகன்“ என்ற நகரத்தில் இரண்டாம் போப் வாழ்ந்த பகுதியில் திடீரென்று ஒரு வியப்பான சம்பவம் நடக்கும் என்றும் இதனால் உலகம் வியப்பில் ஆழ்ந்து போகும் சம்பவங்களாக இந்த இரண்டு சம்பவங்கள் அமைய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பை தருகின்றது.

Friday 9 June 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 6)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் பகுதி - 6)

    தீர்க்கதரிசனத்தின் எஞ்சிய பகுதிகள் இனி “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இப்பகுதியில் இடம் பெற உள்ளன.

    நாம் வெளியிட்ட அனைத்து தீர்க்கதரிசனங்களும் செயல்படும் காலம் வந்துவிட்டன. உலக மக்களின் மனதில் மரணப் பயங்கள் தென்படும் அளவிற்கு சம்பவங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்க போகின்றன என 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு ஒரு குறிப்பை தருகின்றது.


    இன்றைய 6-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் பல செய்திக் குறிப்புகள் தீர்க்கதரிசனங்களாக நாம் காண இருக்கின்றோம். அதில் முதலாவதாக “வாணியம்பாடி“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பகுதி என்றும், நகரத்தின் தெற்குவாசல் என்ற அடைமொழி கொண்ட ஒரு இடத்தில் நடக்கும் சம்பவம் தமிழக மக்களை நிலைகுலையச்  செய்யும் என்று இந்த தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.

Friday 2 June 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 5)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் பகுதி - 5)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெறுவது 5-வது தீர்க்க தரிசனப் பகுதியாகும்.


    இந்த 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் பல குறிப்புகள் இடம் பெற உள்ளன. அதில் முதலாவது குறிப்பு என்னவெனில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 4-ம் தீர்க்க தரிசனம் குறிப்புகளில் சில விஷயங்கள் நடக்க உள்ளன. அவைகள் நடைபெறும் காலக் கட்டமாக இக்காலம் இருக்கும் என்றும், இச்சமயத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் மரணச் செய்தியினை நமது இந்திய தேசம் அறிய உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனத்தின் முதல் குறிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.


    தற்போது உருவாகும் மகா புயல் ஒன்று தென் தமிழகத்தையே படாதுபாடுபடுத்தும் என்றும், மக்கள் பலர் இறக்க நேரிடும் சம்பவம் நிச்சயம் நடக்க உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Friday 26 May 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 4)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் பகுதி - 4)

“உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிடப்படும் தீர்க்கதரிசனங்கள் யாவும் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்கதரிசனப் பகுதியில் வெளியிட்ட 66 தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு ஆரம்பித்து நடக்கப் போகின்றன என்பதற்கான விளக்க குறிப்புகளே தற்போது உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் நாம் வெளியிடுகிறோம்.


வாசக நண்பர்கள் அனைவருக்கும் இங்கு ஒரு முக்கிய குறிப்பை தர விரும்புகிறேன். அதாவது இங்கு வெளியிடப்படும் தீர்க்க தரிசனக் குறிப்புகள் யாவும் ஏற்கனவே நமது முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், தீர்க்க தரிசிகள், வேதக்குறிப்புகள் போன்ற தொகுப்புகளிலிருந்தோ, சொல்லப்பட்ட தீர்க்கதரிசனக் குறிப்புகளிலிருந்தோ எடுத்து தரப்படும் செய்திகள் அல்ல. இவை யாவும் எமக்கு இறைஅருளால் வழங்கப்படும் குறிப்புகளே ஆகும். ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பமே.

இனி உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்கதரிசனப் பகுதியில் நாம் தெரிந்து கொள்ள இருப்பது 4-ம் தீர்க்கதரிசனப் பகுதியின் குறிப்புகள் ஆகும். அவைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

Friday 19 May 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 3)

                                                    உண்மைகள் உறங்குவதில்லை
                                                            (தீர்க்கதரிசனம் பகுதி - 3)

    உலகில் இனி நடக்கும் பல சம்பவங்களுக்கான காரண காரியங்களை எவராலும் அறிய முடியாது. ஊகிக்கவும் முடியாது. அவ்வாறு ஊகித்து வெளியிடப்படும் எச்செய்தியும் எங்கும் நடக்காது என இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஆணித்தரமாக தனது செய்தியினை இங்கு பதிவு செய்கிறது.

    வெவ்வேறு மதங்கள் வெளிப்படுத்திய பல கருத்துகள் கூட இனி இப்பூமியில் நடக்காது என்றும், இனி வரும் தீர்க்கதரிசனங்கள் கூட ஏற்கனவே “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்கதரிசனப் பகுதியில் நாம் வெளியிட்ட தீர்க்க தரிசனத்தின் உண்மை நிலைகளை விளக்கும் ஒரு புதிய தீர்க்கதரிசனப் பகுதியாக இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனப் பகுதி இருக்கும் என்ற மற்றொரு செய்தியினை இங்கு நாம் பதிவு செய்கிறோம்.

    இனி  இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் தீர்க்கதரிசனங்களை நாம் காண்போம்.

Friday 12 May 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 2)

உண்மைகள் உறங்குவதில்லை
தீர்க்கதரிசனம் இரண்டாம் பகுதி

               “உண்மைகள் உறங்குவதில்லைஎன்கிற தீர்க்கதரிசனத்தின் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசன குறிப்புகள் யாவும்தீர்க்கதரிசனத்தின் 2-ம் பகுதி ஆகும். அதாவது இரண்டாம் தீர்க்கதரிசனமாகும்.



               மலேசியா நாட்டின் கடற்கரை ஓரமாக இடம் பெற்றுள்ள ஒரு தமிழரின் வணிக வளாகம் மிகப்பெரிய விபத்துக்குள்ளாகும். இது தமிழர்களுக்கு எதிரான ஒரு நாச வேலை ஆகும். இந்த விபத்தில் பலர் இறக்க நேரிடும். இந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன் மலேசிய அரசுக்கு ஒரு தீவிரவாத அமைப்பு மிகப்பெரிய எச்சரிக்கையை விடும். அந்த சமயத்தில் சீன அரசு இந்திய எல்லையிலும், நேபாளத்தின் எல்லையிலும் ஒரு மிகப்பெரிய அரசியல் சார்ந்த சம்பவத்தை நிறைவேற்றும். இதனால் இந்திய எல்லையில் ஒரு பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும். இந்த சம்பவத்தை சீன அரசு ஒரு மதக்குருவிற்கு எதிராக மேற்கொண்ட சம்பவமாக தன்னை காட்டிக் கொள்ளும் என இரண்டாம் தீர்க்கதரிசனம் இங்கு சுட்டிக் காட்டுகின்றது.

Sunday 7 May 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2) உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 1)

                                                   உண்மைகள் உறங்குவதில்லை
                                                  தீர்க்கதரிசனம் இரண்டாம் பகுதி
                                                     (முதல் தீர்க்கதரிசனம் - 2017)

”ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற இந்த தீர்க்கதரிசனம் பகுதியில் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனங்களில் பல நடந்துள்ளன. சில தீர்க்கதரிசனங்கள் தற்போது நடக்கும் கால கட்டத்திற்குள் பயணித்து வருகின்றன.

பொதுவாக தீர்க்கதரிசனப் பகுதிகளில் வெளியிடப்படும் தேதிகளையும், மாதங்களையும், ஆண்டுகளையும் நாம் கவனத்தில் கொள்ளக் கூடாது. அவை நடப்பதும், தள்ளிப் போவதும் நமது கைகளுக்குள் இல்லை. இது இறைவனின் திட்டம். அதனை நிறைவேற்றுவது அவரின் வரம்புக்குள் உள்ள ஒரு அரிய நிகழ்வாகும்.

இன்று ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்கதரிசனப் பகுதியின் இரண்டாவது அத்தியாயத்தின் வெளிப்பாடுகளை வாரம் ஒருமுறை வெளியிட உள்ளேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தீர்க்கதரிசனப் பகுதிகள் இதில் இடம் பெறும் அந்த வகையில் இன்று வெளியிடும் தீர்க்கதரிசனத்தின் தலைப்பு “உண்மைகள் உறங்குவதில்லை“ என்பதாகும். இந்த பகுதியில் இடம்பெறும் முதல் தீர்க்கதரிசனத்தைப் பற்றி இங்கு காண்போம்.



வெற்றிகளை கண்டவன் துன்பங்களை காண மாட்டான் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமான முடிவாக இருக்குமோ அதுபோன்று இனி பல நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க உள்ளன. களவுகள் பல செய்து வெற்றிகளை கண்ட மாபெரும் ஒரு அரசியல்வாதி வரும் மாதத்தில் திடீரென்று மாரடைப்பால் இறக்க உள்ளார். அவரின் இறப்பானது ஒரு வெள்ளிக்கிழமை அன்று இரவு வேளையில் நடக்கும். அதன் செய்தி சனிக்கிழமை அன்று மாலையில் மட்டுமே மக்களுக்கு தெரிய வரும். அந்த அரசியல்வாதி இறந்து 30வது மணி நேரத்திலிருந்து தமிழகத்தில் அடைமழை பொழியத் துவங்கும். இந்த மழையினால் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமபுறங்களும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் இன்று வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனம் இதுவாகும்.


“உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த பகுதியில் அடுத்த நிகழ்வாக தமிழகத்திலிருந்து சென்று புதுடில்லியில் வசித்து வரும் மிகப்பெரிய அரசியல் கபட நாடகத்தாரி ஒரு மிகப்பெரிய தீவிரவாதியால் சுட்டுக் கொள்ளப்படும் நிகழ்வு நடக்க உள்ளதாக தீாக்கதரிசனப் பகுதி குறிப்பிட்டு காட்டுகிறது. நாட்டை ஆளும் தகுதிவாய்ந்த பல அரசியல் பிரமுகர்களுக்கு நன்கு நெருக்கமான இவர் அந்த மரண நிகழ்வை சந்திக்கும் முன்பு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்க நாதரை தரிசனம் செய்வார் என்றும் அப்பொழுது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை நடைபெறும் என்ற குறிப்பை “ உண்மைகள் உறங்குவதில்லை “ என்ற தீர்க்கதரிசனப் பகுதி இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


தமிழகத்தில் பல ஆன்மீகவாதிகள் தங்களை “மகான்“ “சித்தர்“ “அவதாரப்பெருமான்“ “கல்கி“ என்றெல்லாம் அடைமொழியிட்டு தங்களையே சுயவிளம்பரமிட்டு மக்களிடையே பேரும் புகழும் அடைய மக்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் இது போதாத காலமாகும். 
அந்தவகையில் தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் வம்சாவழி நான் ஒருவனே என்று மக்களிடையே கூறி வரும் ஒரு ஆன்மீகவாதியின் மறைவு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையப் போகிறது என்றும், முருகப்பெருமானின் புகழ் பாடும் ஒரு அமைப்பு தன் வழியையே மறந்து போகும் அளவிற்கு பரிதாப நிலைக்குச் செல்லும் என்றும், சிற்பம், சிலை, தியானம், மலை என்றெல்லாம் புகழ் தேடும் ஒரு ஆன்மீக அமைப்பு வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் தன் பொழிவை இழக்கும் என்று தீர்க்கதரிசனத்தின் இப்பகுதி சுட்டிக்காட்டுகின்றது.


மன்னார் வளைகுடாவில் ஒரு ஆழிப்பேரலை ஒன்று தற்போது உருவாகி வருகிறது என்றும் இந்த ஆழிப்பேரலை வடக்கிலிருந்து தெற்காக 30 டிகிரி அட்ச ரேகையிலிருந்து நகர்ந்து 40 முதல் 50 மைல் (நாட்டிக்கல் மைல் வேகம்) வேகத்தில் நகர்ந்து கரையை தொட்டு கடக்கும் சமயத்தில் பல பேரழிவுகள் நடக்க உள்ளதாகவும் அப்பொழுது நங்கூரமிட்டு (நங்கூரம்) நிறுத்தப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய கப்பல் கடல்கரையை தொட்டு நிற்கும் என்றும், 
அந்த கப்பலின் உள்ளே பல உடல்கள் இறந்த நிலையில் அரசு கண்டறியும் என்றும் அங்கே பிரபஞ்சம் வியக்கும் அதிசியமாக சில வினோத உருவங்களின் உடல்களை கண்டு உலகமே வியக்கும் அதிசியம் நடக்கும் என்றும் இதனால் இவ்வுலகத்தில் எப்பொழுதுமே “உண்மைகள் உறங்குவதில்லை“ அவை ஒரு நாள் வெளிச்சத்திற்கு நிச்சயம் வரும் என்ற உண்மையை மக்கள் அறிவார்கள் என்று இப்பகுதி தெளிவாக கூறுகிறது.


“தென்னாடு உடைய சிவனே போற்றி” என்ற கூற்றின்படி எந்த பகுதியை சேர்ந்தவர் சிவன் என்ற தர்க்க கேள்வி தற்பொழுது ஆய்விற்காக ஒரு ஆன்மீக அமைப்பு தேர்ந்தெடுத்து தனது ஆய்வினை தமிழகத்தில் ஆரம்பிக்கும் இச்சமயத்தில் தென் தமிழகத்தில் நடக்கும் ஒரு அகழ்வராய்ச்சியில் அதிசியமிக்க ஒரு புதைபொருள் நம் தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற செய்தி வாயிலாக தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் ஒரு உண்மையை அறியப் போகும் காலமாக இக்காலம் (2017) அமைய உள்ளதாக தீர்க்கதரிசனத்தின் முதல் பகுதி இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


ஆகவே இனி “உண்மைகள் ஒரு போதும் உறங்காது“ என்ற கூற்று 
உண்மையாக மாறும் காலத்திற்காக நாம் காத்திருப்போம்.

--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர்ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- 
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.