Friday 8 June 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 16)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 16)
(பதினாறாம் தீர்க்கதரிசனம்)

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனிதனுடைய வாழ்க்கையில் பலவித சம்பவங்கள் நடப்பதுண்டு. அதைப் போன்றுதான் இந்த பிரபஞ்சத்திலும் தினசரி பல சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அவைகளை மனித சமூகம் அறிய முடியாமல் இருந்து வந்துள்ளனர் என்பதே உண்மை.


    இனி நிகழ்கால உண்மைகளாக, இந்த பிரபஞ்சத்தில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உலகத்தில் உள்ள மனித சமூகம் காணப் போகின்றது என்று நமது “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 16-ம் பகுதி ஒரு உண்மையை மெய்பட கூறுகின்றது.

Friday 1 June 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 15)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 15)
(பதினைந்தாம் தீர்க்கதரிசனம்)


“காலத்தால் அழிக்க முடியாத இறை காவியம் ஒன்று இப்பூமியில் விரைவில் அரங்கேற்றப்பட உள்ளது“, இதனை தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் கடந்த 1000 வருடங்களாக இப்புவியில் தனது வெளிப்பாட்டினை வசனங்களாக வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சத்திய யுகத்தின் தீர்க்கதரிசனங்களும் பல்வேறு காலக் கட்டங்களில் இறைவன், மனிதர்கள் வாயிலாக இப்புவியில் நடக்கும் பல மாற்றங்கள், சம்பவங்கள், அரசியல் பிண்ணணிகள், புவியின் மாற்றங்கள், அழிவுச் சம்பவங்கள், இயற்கையின் மாற்றங்கள், வானிலை மாற்றங்கள், இறை அதிசயங்கள் போன்றவற்றை தீர்க்கதரிசனங்களாக வெளிப்படுத்தி வருகிறார்.


பொதுவாக மனிதர்கள் தன்னை சுற்றி நடக்கும் பல சம்பவங்கள் சூழ்நிலைக் காரணங்களை மட்டுமே உண்மை என நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை அன்று. அது அனைத்துமே இறைவன் மனிதகுலத்திற்கு தரும் ஒரு எச்சரிக்கை செய்தியே ஆகும். இதுவே இன்று சத்திய யுகத்தில் மனிதகுலம் அறிய வேண்டிய தீர்க்கதரிசனங்கள் ஆகும்.

Friday 25 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 14)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 14)
(பதினான்காம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 14-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 14-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக, மிக முக்கியத்துவம் பெற்றவை.


    14-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள இருப்பது “வரும் ஜுன் மாதம்“ மிகவும் முக்கியத்துவம் பெற்ற மாதம் என்றும், அந்த மாதத்தில் தமிழகத்தில் பல மழை வெள்ளங்கள் தொடர்ச்சியாக உருவாகி பலத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளன என்றும், தமிழகத்தின் நிலை வெள்ளக்காடாக மாறப் போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.

Friday 18 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 13)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 13)
(பதிமூன்றாம் தீர்க்கதரிசனம்)

    “ சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 13-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் குறிப்புகளும், கருத்துக்களும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.


    13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் “மக்களால் நான், மக்களுக்காக நான்“ என்ற முன்னாள் தமிழக முதல்வரின் மிக அருமையான ஒரு சொர்க்கம் போன்ற இரகசியம் ஒன்று தற்பொழுது கண்டறியப்பட்டு, மக்கள் அறியும்படி ஒரு ஊடகம் செய்தியை வெளியிடும் என்றும், அது ஒரு உயில் சாசனமாக இருக்கும் என்பதே இன்றைய தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவம் என முதலாம் தீர்க்கதரிசனம் குறிப்பை தருகின்றது.

Friday 11 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 12)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 12)
(பண்ணிரெண்டாம் தீர்க்கதரிசனம்)

“சத்திய யுகத்தின்“ வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 12-ம் பகுதியாகும். இது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

தீர்க்கதரிசனங்கள் யாவும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இந்த காலத்தின் சூழ்நிலைகளை எவராலும் கணிக்க முடியாத அளவில் நிகழ்வுகள் நடக்கப் போவதாக 12-ம் தீர்க்கதரிசனத்தின் முதல் குறிப்பு நமக்கு ஒரு செய்தியை குறிப்பிடுகின்றது. அதாவது வரக்கூடிய சுனாமி, மழை, புயல் என இயற்கையின் பேரிடர்களை இனி ஆராய்ச்சியாளர்கள் கூட கணிப்பது தவறாக இருக்கும் என்றும், ஆனால் சத்திய யுக தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.

Friday 4 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 11)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 11)
(பதினொன்றாம் தீர்க்கதரிசனம்)

    இன்று “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 11-ம் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளை இங்கு காண உள்ளோம். இந்த 11-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் வருங்காலத்தைப் பற்றி எடுத்துக் கூறும் நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

    இந்த 11-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது என்னவெனில், “இந்திய தேசத்தின் வட எல்லையில்“ மிகப்பெரிய சோகச் சம்பவம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இது ஆன்மீகம் சார்ந்த பகுதியில் நடைபெறக் கூடிய மிகப்பெரிய சோகச் சம்பவமாக இருக்கும் என்றும், இந்திய ஆன்மீக வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கவே முடியாது என்று 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.

Friday 27 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 10)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 10)
(பத்தாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 10-ம் பகுதியாகும். இது பல்வேறு குறிப்புகள் அடங்கிய தீர்க்கதரிசனப் பகுதியாகும்.


    இந்த 10-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கத்தரிசனம் என்னவெனில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றங்கள் 90% இருக்கும் எனவும், இது வடதமிழகம், தென்தமிழகம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் புயல், மழை, சூறாவளிக் காற்று, கடல் சீற்றம் என இருக்கும்படி அமைய உள்ளதாக இந்த 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

Friday 20 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 9)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 9)
(ஒன்பதாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 9-ம் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் யாவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.


    9-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் “மயிலாடுதுறை“ மக்களின் கவனத்தை ஈர்க்க உள்ளதாகவும், அங்கு உள்ள ஒரு ஆன்மீக அமைப்பில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இருப்பதாகவும், சித்தரை 18-ம் நாளிலிருந்து இந்த சம்பவங்கள் துவங்கிட உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

Friday 13 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 8)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 8)
(எட்டாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 8-ம் பகுதியாகும். இந்த 8-ம் தீர்க்கதரிசனத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. அவைகளைப் பற்றி இங்கு காண்போம்.

    இந்த 8-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் உலகத்தின் முக்கிய பிரசித்திப் பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய நினைவிடங்களில் ஒன்று, உலக தீவிரவாதிகளால் முழுமையாக அழிக்கப்பட உள்ளது என்றும், இது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முக்கிய நிகழ்வாக அமைய போவதாகவும், இதனால் உலக நாடுகள் அச்சமடையும் ஒரு தீவிரவாத செயலாக இருக்குமென 8-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு குறிப்பை தருகிறது.

Friday 6 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 7)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 7)
(ஏழாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகத்தின்“ 7-ம் தீர்க்கதரிசனத்தின் முக்கிய பகுதிகள் இன்று வெளிப்படுத்தப்படுகின்றன.

    இந்த 7-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் இந்திய வான் பகுதியில் தோன்றும் சில வினோதமான உருவங்களினால் மக்கள் ஆச்சர்யங்களையும், பயத்தினையும் சுமந்த மனநிலையில் இருக்கும்படியான ஒரு அதிசய சம்பவம் உடனே நடக்க இருப்பதாகவும், இது இந்திய மண்ணில் இயேசுவின் வருகைக்கான அறிவிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமென 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.

Friday 30 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 6)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 6)
(ஆறாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரினத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 6-ம் பகுதியாகும். இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளும், செய்திகளும் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்க்க போவதாக ஒரு செய்திக் குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கே பதிவு செய்கிறது.


    உலக வரலாற்றில் இடம் பெற உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றில் தற்போது உருவாகும் புயல் பல ஆயிரம் மக்களை பழிவாங்கிடப் போகிறது என்றும், இது “சுனாமி“ எனும் பேரலைகளால் உருவாகும் பேராபத்து என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது. கடல் பரப்பில் உள்ள பல நகரங்கள் இதனால் அழிவிற்கு உட்படுத்தப்பட போவதாகவும் இது இறைவனின் நீயாயத்தீர்ப்பில் நடந்து முடியப் போகும் சம்பவம் என்று ஒரு செய்திக்குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே மக்களுக்கு சுட்டிக் காட்டுகின்றது.

Friday 23 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 5)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 5)
(ஐந்தாம் தீர்க்கதரிசனம்)

    “நமது சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காண இருக்கும் தீர்க்கதரிசனப் பகுதி 5-ம் பகுதியாகும். பல அரிய நடைமுறை குறிப்புகளை கொண்ட தீர்க்கதரிசனமாக இப்பகுதி இருக்கும் என்பதே சிறப்பு வாய்ந்த ஒரு செய்தியாகும்.


“சத்திய யுகம்“ வருங்கால தீர்க்க தரிசனத்தின் 5-ம் பகுதியில் இன்று முதலாவதாக நாம் தெரிந்துகொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் தமிழ்நாட்டு மக்கள் பல குழப்பங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் என்றும், அதற்கான அரசியல் நிலவரங்களும், கல்விக் கொள்கைகளும், நீர் தன்மை ஆதாரங்களும். நடிகர்கள் பற்றியச் செய்திகளும் இதற்கு காரணமாக அமைய இருப்பதாகவும், தென்னிந்திய நடிகர் ஒருவரின் “அந்தரங்கம்“ ஒன்று தற்போது ஆதாரப்பூர்வமாக வெளியாகி மக்களிடையே பல குழப்பங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றது.

Friday 16 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 4)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 4)
(நான்காம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனம் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப் பகுதி 4-ம் பகுதியாகும். இந்த 4-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் ஒவ்வொரு குறிப்புகளும் உடனே நடந்து முடிய உள்ளன. இந்த பூமி எங்கும் இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இறங்கும் காலமாக இக்காலம் இருக்கும் என இந்த 4-ம் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


    இந்திய துணைக் கண்டங்கள் முழுவதும் இயற்கை சீற்றங்களான புயல், மழை, சூறாவளிக்காற்று என பல கோர தாண்டவங்களால் அப்பகுதிகள் பலத்த சேதங்களை சந்திக்க இருப்பதாகவும், மக்களின் இறப்பு சதவீதம் 8 % முதல் 12 % வீதம் வரை இருக்கும் என தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Friday 9 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 3)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 3)
(மூன்றாம் தீர்க்கதரிசனம்)

    இன்று நமது “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் தீர்க்கதரிசனப் பகுதி 3-ம் பகுதியாகும். இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனங்கள் ஆகும்.


    பொதுவாக இந்த உலகில் ஏற்கனவே பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு நபர்களால் வெளியிடப்பட்ட பல்வேறு தீர்க்கதரிசனங்களில் பெரும்பான்மையானவை ஏதும் நடக்கவில்லை என்பதே மிக, மிக முக்கியமான குறிப்பாகும். அந்த வகையில் பலரின் நம்பிக்கைகள் தீர்க்கதரிசனங்கள் மீது இருப்பது இல்லை. அவைகளை முறியடிக்கும்விதமாக நமது சத்திய யுக தீர்க்கதரிசனப் பகுதிகள் அதிவிரைவாக நடந்து முடிந்திட உள்ளன. உலக மக்களின் ஒட்டுமொத்த கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த தீர்க்கதரிசனப் பகுதியாக “நமது சத்திய யுக தீர்க்கதரிசனங்கள்“ அமைய உள்ளதாக ஒரு செய்திக் குறிப்பு நமக்கு தெரிவிக்கின்றன.

Friday 2 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 2)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 2)
(இரண்டாம் தீர்க்கதரிசனம்)

    “நமது சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனப் பகுதி இரண்டாம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இதில் பல்வேறு செய்திக்குறிப்புகள் இடம்பெற உள்ளன. அவைகளை இங்கு நாம் காண்போம்.


    இன்றைய இரண்டாம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக இடம்பெறும் தீர்க்கதரிசனம் என்னவெனில் அயல்நாட்டில் உருவாகும் மிகப்பெரிய சோகச்சம்பவம் மனிதஉயிர்கள் மடிந்து போகும் நிகழ்வுகளால் உலக அழிவதற்கான முதல் சுவடு என தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றன. மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயச்சூழல் ஒன்று இந்த நிகழ்வின் மூலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சத்தியயுக வருங்கால தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு ஒரு செய்திக் குறிப்பை சுட்டிக்காட்டுகின்றது.

Monday 26 February 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 1)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 1)
(முதல் தீர்க்கதரிசனம்)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவடைந்து தற்போது மூன்றாம் கட்டமாக நமது வருங்கால தீர்க்கதரிசனங்கள் யாவும் “சத்திய யுகம்“ என்ற தலைப்பில் வெளிவர உள்ளன.

    உலக மக்கள் யாவரும் இனி நமது வருங்கால தீர்க்கதரிசனத்தின் உண்மைச் செய்திகளை நமது “சத்திய யுகம்“ இணையதளப் பகுதியில் வாரம், வாரம் வெள்ளி அன்று காணலாம்.

    உண்மைகள் உறங்குவதில்லை அது மக்கள் மத்தியில் ஒருநாள் வெளிச்சமாக வெளிவரும் என்ற நமது கூற்றின்படி நமது தீர்க்கதரினங்கள் யாவும் மெய்படும் காலமாக தற்போது “சத்திய யுகம்“ தீர்க்கதரிசனப் பகுதிகள் இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.