Friday 31 October 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 3)



     ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரின் மூன்றாம் பாகத்தில் இடம் பெறும் தீர்க்கதரிசனங்களை பற்றி இங்கு காண்போம். தீர்க்கதரிசனங்கள் என்பவை எவை? அவை எப்படி மனிதனால் கூற முடிகிறது? என்ற கேள்விகளுக்கு பல லட்சக்கணக்கான மக்களும், மெய் ஞானிகளும் இன்றுவரை அதற்கான விடையை தேடி வருகின்றனர், தனது ஆழ்மனதின் மூலமாக மனிதன் உணர்ந்து சொல்லக்கூடிய விஷயங்களுக்கு “தீர்க்கதரிசனங்கள்” என்று அர்த்தமல்ல, அவைகளுக்கு பெயர் வேறு, அதாவது ஆழ்மனதின் சக்தி அலைகளால், சில நேரத்தில் நடக்கும் ஒரு மனிதனின் தனிப்பட்ட செயல்களை பற்றி தெரிவிக்கும் ஆழ்மனதின் பதிவுகளே இவைகளாகும். இது தனி ஒரு மனிதன் தனது ஆழ்மனதின் வழியாக மற்றொரு மனிதனின் ஆழ்மனதிற்குள் மறைந்துள்ள செய்திகளை தனது ஈர்ப்பு சக்தியினால் உட்கவர்ந்து சொல்லக்கூடிய மனோசக்தி ஆற்றலே இதுவாகும்.

     ஆகையால் தீர்க்கதரிசனம் என்பது முற்றிலும் வேறானது, அதாவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியானது மனிதனுடைய “பீனியல்” சுரப்பியின் செயல்பாட்டோடு இணைந்து அவனின் மூளைக்குள் உலகியல் செய்திகளை மின்காந்த அலைகளாக செலுத்தப்பட்டு அது அவனிடமிருந்து உரிய காலக்கட்டத்தில் அந்த அற்புத சக்தியால் மீண்டும் இயக்கப்பட்டு சொல்லப்படும் விஷயங்களே இங்கு தீர்க்கதரிசனங்கள் என்று சொல்லப்படுகின்றன.

Wednesday 29 October 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 2)




     தீர்க்கதரிசனங்கள் என்றுமே பொய்த்துப்போனவை அல்ல, அப்படி நடைபெறாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு, ஒருவர் தன்னை மிகைப்படுத்திக்கொள்வதற்காக வெளியிடப்படும் தீர்க்கதரிசனங்கள் யாவும் இன்றுவரை உலகில் நடைபெறாமல் இருந்துள்ளன, ஆனால் தன் சுயலாபமின்றி, உலகின் நன்மைக்காக இறைவனின் ஆசிர்வாதத்தோடு வெளிப்படும் தீர்க்கதரிசனங்கள் இன்றுவரை நடந்து வருகின்றன, அதற்கு உதாரணமாக பைபிள், குரான், மற்றும் இந்து மதத்தின் நிஜமான ஞானிகளின் தீர்க்கதரிசனங்கள் போன்றவை இன்றுவரை வியத்தகு வகையில் நடைபெற்று வருகின்றன.
“ஆகயத்தில் ஒரு ஒளி என்ற இந்த ஆன்மீக தொடரில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனம் மிக முக்கியமான தீர்க்கதரிசனமாகும், இப்புவியின் மீது இறைவனின் நியாத்தீர்ப்புகள் வழங்கும் இறுதிநாள் என்று பல மதத்தினர் இன்றும் பிரசங்கம் செய்து வருகின்றனர், இது உண்மையில் நடக்கும் செயலா? என்ற கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு, ஆனால் உலகம் முழுவதும் அழியும் ஊழிக்காலம் இக்காலம் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது, ஆனால் படைத்த இறைவன் அனைத்தையும் அழிக்கும் நிலைக்கு போகமாட்டார், ஆனால் அவரின் பிரவேசம் இப்புவி மீது முழுமையாக இருக்கும்படி அமையும், இதுவே இறைவனின் வருகைக்கான முக்கிய ஒரு அறிவிப்பாக நாம் இங்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

Monday 27 October 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி - (பகுதி – 1)



        உலக நடப்புகளை மக்கள் அறிந்து கொள்ள எப்பொழுதுமே ஆவலாக உள்ளார்கள், அதாவது நடந்து முடிந்த நிகழ்வின் உண்மைத் தன்மைகளை செய்தித்தாள்கள், ஊடகங்கள், வலைதளங்கள் வழியாக அறிந்து கொள்ள இன்றைய மக்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர். ஆனால் வருங்காலத்தின் நிகழ்வுகளை நமது முன்னோர்களில் பலர் குறிப்பிட்டு சென்று உள்ளனர், அவைகளில் நாம் ஆர்வம் கொண்டு இருந்தாலும் நம்பகத்தன்மை நம்மிடையே குறைவாக இருப்பதனால் அதனை முழுமையாக நாம் எவரும் ஏற்றுக்கொள்வதில்லை, சில நேரங்களில் விஞ்ஞானத்தின் மீது நாம் முழுமையாக நம்பிக்கை கொண்டு இருந்தாலும் அவைகள் நடந்து போகாமல் தோல்வியில் முடியும் போது மக்கள் அதனையும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.

     
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடர் ஆன்மீகமாகவும், மெய்ஞானமாகவும், சில சமயத்தில் விஞ்ஞானமாகவும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம், இன்று இங்கு வெளிப்படும் விஷயங்கள் நமக்கு கற்பனையாக தெரிந்தாலும் அவை வருங்காலத்தின்நிஜத்தின் பக்கங்கள்எனபதை மட்டும் நாம் மறந்துவிடக்கூடாது.

Sunday 26 October 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (வருங்கால தீர்க்கதரிசனங்கள்)



ஆகாயத்தில் ஒரு ஒளி
(வருங்கால தீர்க்கதரிசனங்கள்)

இந்த பகுதியில் ஆன்மீக தொடர்களை நான் வெளியிட விரும்புகிறேன், இந்த பகுதியில் நண்பர்களாகவும், ஆர்வலர்களாகவும், ஆன்மீக நண்பர்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும் இணைந்துள்ள அனைவருக்கும் எமது வணக்கங்கள்….
இங்கு இடம் பெறும் முதல் ஆன்மீகத் தொடரின் தலைப்பு ஆகாயத்தில் ஒரு ஒளி, இந்த தொடரில் பல உலக நடப்புகளைப்பற்றிய தீர்க்க தரிசனங்களை உங்களுக்கு தெரிவிக்க ஆசைப்படுகிறேன். உற்று கவனித்தால் இவைகளின் உண்மைத்தன்மைகளை நீங்கள் றிந்து கொள்ளமுடியும், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், தவறுகள் திருத்திக்கொள்ளப்படும். உங்களுடைய விமர்சனங்களும், கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன.
நன்றி.
--ஆசிரியர்
ஸ்ரீ யோகேஸ்வரன்