Friday 30 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 6)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 6)
(ஆறாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரினத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 6-ம் பகுதியாகும். இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளும், செய்திகளும் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்க்க போவதாக ஒரு செய்திக் குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கே பதிவு செய்கிறது.


    உலக வரலாற்றில் இடம் பெற உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றில் தற்போது உருவாகும் புயல் பல ஆயிரம் மக்களை பழிவாங்கிடப் போகிறது என்றும், இது “சுனாமி“ எனும் பேரலைகளால் உருவாகும் பேராபத்து என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது. கடல் பரப்பில் உள்ள பல நகரங்கள் இதனால் அழிவிற்கு உட்படுத்தப்பட போவதாகவும் இது இறைவனின் நீயாயத்தீர்ப்பில் நடந்து முடியப் போகும் சம்பவம் என்று ஒரு செய்திக்குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே மக்களுக்கு சுட்டிக் காட்டுகின்றது.

Friday 23 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 5)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 5)
(ஐந்தாம் தீர்க்கதரிசனம்)

    “நமது சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காண இருக்கும் தீர்க்கதரிசனப் பகுதி 5-ம் பகுதியாகும். பல அரிய நடைமுறை குறிப்புகளை கொண்ட தீர்க்கதரிசனமாக இப்பகுதி இருக்கும் என்பதே சிறப்பு வாய்ந்த ஒரு செய்தியாகும்.


“சத்திய யுகம்“ வருங்கால தீர்க்க தரிசனத்தின் 5-ம் பகுதியில் இன்று முதலாவதாக நாம் தெரிந்துகொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் தமிழ்நாட்டு மக்கள் பல குழப்பங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் என்றும், அதற்கான அரசியல் நிலவரங்களும், கல்விக் கொள்கைகளும், நீர் தன்மை ஆதாரங்களும். நடிகர்கள் பற்றியச் செய்திகளும் இதற்கு காரணமாக அமைய இருப்பதாகவும், தென்னிந்திய நடிகர் ஒருவரின் “அந்தரங்கம்“ ஒன்று தற்போது ஆதாரப்பூர்வமாக வெளியாகி மக்களிடையே பல குழப்பங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றது.

Friday 16 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 4)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 4)
(நான்காம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனம் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப் பகுதி 4-ம் பகுதியாகும். இந்த 4-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் ஒவ்வொரு குறிப்புகளும் உடனே நடந்து முடிய உள்ளன. இந்த பூமி எங்கும் இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இறங்கும் காலமாக இக்காலம் இருக்கும் என இந்த 4-ம் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


    இந்திய துணைக் கண்டங்கள் முழுவதும் இயற்கை சீற்றங்களான புயல், மழை, சூறாவளிக்காற்று என பல கோர தாண்டவங்களால் அப்பகுதிகள் பலத்த சேதங்களை சந்திக்க இருப்பதாகவும், மக்களின் இறப்பு சதவீதம் 8 % முதல் 12 % வீதம் வரை இருக்கும் என தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Friday 9 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 3)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 3)
(மூன்றாம் தீர்க்கதரிசனம்)

    இன்று நமது “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் தீர்க்கதரிசனப் பகுதி 3-ம் பகுதியாகும். இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனங்கள் ஆகும்.


    பொதுவாக இந்த உலகில் ஏற்கனவே பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு நபர்களால் வெளியிடப்பட்ட பல்வேறு தீர்க்கதரிசனங்களில் பெரும்பான்மையானவை ஏதும் நடக்கவில்லை என்பதே மிக, மிக முக்கியமான குறிப்பாகும். அந்த வகையில் பலரின் நம்பிக்கைகள் தீர்க்கதரிசனங்கள் மீது இருப்பது இல்லை. அவைகளை முறியடிக்கும்விதமாக நமது சத்திய யுக தீர்க்கதரிசனப் பகுதிகள் அதிவிரைவாக நடந்து முடிந்திட உள்ளன. உலக மக்களின் ஒட்டுமொத்த கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த தீர்க்கதரிசனப் பகுதியாக “நமது சத்திய யுக தீர்க்கதரிசனங்கள்“ அமைய உள்ளதாக ஒரு செய்திக் குறிப்பு நமக்கு தெரிவிக்கின்றன.

Friday 2 March 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 2)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 2)
(இரண்டாம் தீர்க்கதரிசனம்)

    “நமது சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனப் பகுதி இரண்டாம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இதில் பல்வேறு செய்திக்குறிப்புகள் இடம்பெற உள்ளன. அவைகளை இங்கு நாம் காண்போம்.


    இன்றைய இரண்டாம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக இடம்பெறும் தீர்க்கதரிசனம் என்னவெனில் அயல்நாட்டில் உருவாகும் மிகப்பெரிய சோகச்சம்பவம் மனிதஉயிர்கள் மடிந்து போகும் நிகழ்வுகளால் உலக அழிவதற்கான முதல் சுவடு என தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றன. மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயச்சூழல் ஒன்று இந்த நிகழ்வின் மூலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சத்தியயுக வருங்கால தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு ஒரு செய்திக் குறிப்பை சுட்டிக்காட்டுகின்றது.