Friday 28 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 15)




 ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற தொடரானது இனி உலகத்தின் உண்மை நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கபோகின்றது. மக்களின் மனமாற்றமே யுக மாற்றத்திற்கான திறவு கோல் என்று கடவுள் கோட்பாடுகள் கூறுகின்றன.

உலகத்தின் படைப்பில் இயற்கை அழகானது, அதில் ஆபத்தும் உண்டு, ஆனந்தமும் உண்டு, ஆரோக்கியமும் உண்டு, ஆனால் அதில் உள்ள உண்மைகளை மக்கள் இன்னும் அறியாமல் உள்ளனர், ஆழத்தில் பல இரகசியங்கள் உண்டு. ஆழமென்பது இங்கு கடலின் ஆழத்தை குறிக்கும். இந்த உலகத்தில் திடீரென்று காணமல் போன அனைத்தும் வானத்தில் மறைத்து வைக்கப்படவில்லை. ஆனால் கடலின் ஆழத்தில் பாதுகாக்கப்பட்டு உள்ளது என இன்றைய 15 –ம் தீர்க்கதரிசனம் ஒரு உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

Wednesday 26 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 14)




 ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் 14-ம் தீர்க்கதரிசனத்தை காண உள்ளோம். தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இன்றைய 2014-ம் ஆண்டின் இறுதி நாட்களும், வரும் ஆண்டுகளான 2015 முதல் 2020 வரை ஆகிய ஆறு ஆண்டுகள் மிக சக்திவாய்ந்த ஆண்டுகளாக இருப்பதாக தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை  2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்குள் கட்டாயம் நடந்து முடிந்துவிடும் என்றும், எஞ்சியுள்ள மற்ற தீர்க்கதரிசனங்கள் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுக்குள் நடந்து முடியும் என தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றன.

தீர்க்கதரிசனங்கள் நடந்து முடியும் கால அளவு என்பது இறைவனின் திட்டதில் உள்ள இரகசியம் என்றும், இதனை 18 சித்தர்களில் ஒரு சிலர் முழுமையாக அறிந்து உள்ளனர் என்றும், அந்த சித்தர்கள் உலகில் உள்ள சில மகான்கள் மூலம் இதன் இரகசியங்களை வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வெளியிடுவார்கள் என தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன. தீர்க்கதரிசன குறிப்புகளை இறைவனே முன்னின்று அனைத்து மதங்களை சார்ந்த மனிதர்கள் மூலம் வழங்குவார் என்றும், இதனை மக்கள் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி, அது நடந்தே முடியும் என தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

Monday 24 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 13)


 “ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் இதுவரை பார்த்த அனைத்து தீர்க்கதரிசனங்களும் எப்பொழுது நடக்கும் என்ற கேள்வி நமக்குள் எழலாம். அனைத்தும் இன்னும் சில நாட்களுக்குள் துவங்கி நடக்க ஆரம்பித்துவிடும். ஆனால் தீர்க்கதரிசனங்கள் நடந்து முடியும் கால அளவு மட்டும் நீண்டு இருக்கும், இதற்கு பல காரண காரியங்கள் உண்டு.

பல்வேறு நாடுகளில் உள்ள கிருஸ்துவ அமைப்புகள் “இயேசுவின் வருகையைப்” பற்றிய முன் அறிவிப்புகளை வரும் டிசம்பர் மாதம் முதல் வெளியிடுவார்கள். அவர்களின் அறிவிப்பு நிகழும் சமயத்தில் ஒரு கிருஸ்துவ சபையின் முக்கிய இரகசியம் ஒன்றை ஒரு கிருஸ்துவ பாதரியார் வெளியிடுவார். அது கிருஸ்துவர்கள் மற்றுமின்றி உலக மக்களுக்கே ஆச்சர்யத்தை கொடுக்ககூடும்.

Friday 21 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 12)




     ’ஆகாயத்தில் ஒரு ஒளி’ என்ற தொடரில் இடம் பெறும் வருங்கால தீர்க்கதரிசனங்கள் யாவும் நடைபெறும் காலம் வந்துவிட்டதாக இன்றைய இறைகோட்பாடுகள் தெரிவிக்கின்றன. நமக்குள் உருவாகும் ஒரு எண்ணமே  நாளைய புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலமான சக்தி என்பதை மனிதகுலம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எண்ணங்களே மனிதனை ஆக்கபூர்வமான ஒரு படைப்பாக இந்த உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றது ஆகையால்தான் சான்றோர்கள் “எண்ணம் போல் வாழ்வு” என்று கூறுகின்றனர்.

     இந்த உலகில் புதிய, புதிய படைப்புகள் யாவும் மனித அறிவால் உருவாக்குப்பட்டுள்ளன. இந்த அற்புதமான படைப்பின் திறனை மனிதனுக்குள் வைத்தது யார்? இதனை இன்றளவும் “விஞ்ஞானத்தால்” கண்டறிய முடியவில்லை, காரணம் இவ்வாறு ஒரு கேள்விக்கு விடை காண வேண்டும் என மனிதனுக்குள் அறிவுறுத்துவது அவனுடைய மனமே ஆகும். ஆனால் மனித மனதிற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இவ்வுலகில் இருந்து வருகிறது.  அதுவே மனிதனையும், இவ்வுலகத்தையும் இயக்கிவருகிறது. அந்த அற்புத சக்திக்கே ”கடவுள்” என்று பெயர். அந்த கடவுளின் ஒரு சிறு சக்தியே நம்முடைய ஆழ்மனதில் உள்ள ஆழ்மனசக்தியாகும். அதாவது மனோசக்தியாகும் இந்த மனோசக்தியை மனிதன் தனது ஆறாம் அறிவின் வாயிலாகப் பயன்படுத்தும் போது மட்டுமே அவனால் இவ்வுலகில் புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கிடவோ (அ) கண்டறியவோ முடிகிறது. இதைத்தான் “புதுமைகளை படைக்கும் புது மனிதன் என்று வரலாறு” கூறுகிறது.

Wednesday 19 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 11)




     ’ஆகாயத்தில் ஒரு ஒளி’ என்ற இந்த வருங்கால தீர்க்கதரிசனத் தொடரானது இனி பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்ட உள்ளது. அப்பொழுதுதான் மக்கள் இதன் உண்மைத்தன்மைகளை முழுமையாக புரிந்து கொண்டு, இதன் நம்பகத்தன்மையின் மேல் மிகுந்த அக்கறை கொள்வார்கள்.

     உலகத்தில் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்ற கேள்வி மக்களின் மனதில் எழலாம். இது இயற்கையானதே! வரும் துன்பங்களை கண்டு, கண்டு சளித்துப்போன மக்களுக்கு இதுவரை காணாத பல சம்பவங்களின் நிகழ்வுகளைப்பற்றி இந்த தீர்க்கதரிசனத்தின் வாயிலாக அதனை அறியும்பொழுது அவர்களால் இதனை ஏற்றுக்கொள்வது என்பது அசாதாரன விஷயமாகும். ஆனால் இந்த பதினொன்றாம் தீர்க்கதரிசனம் இது போன்ற நிகழ்வுகள் விரைந்து நடக்கப்போவதாக கூறுகின்றன.

Monday 17 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 10)





’ஆகாயத்தில் ஒரு ஒளி’ என்ற இந்த வருங்கால தீர்க்கதரிசனத் தொடரில் இன்று நாம் காணும் விஷயம் சாதாரணமானதன்று. உலக மக்கள் யாவரும் எதிர்பார்க்கும் “யுகமாற்றம்” ஏற்படும் இக்காலக்கட்டத்தில் இந்தியாவின் எல்லைகளை நாம் பாதுகாக்கும் அவசியத்தில் தற்போது உள்ளோம். இது சாதாரணச் செய்திகளாகவோ (அ) ஒரு தெளிவில்லாத தீர்க்கதரிசனமாகவோ நாம் எண்ணிவிடக்கூடாது, கடல் எல்லையில் பல பயங்கர ஊடுருவல் நடக்கும் காலம் இதுவென்று இன்றைய தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் எச்சரிக்கை செய்கின்றன.

     உலக மக்களை காத்திடும் அவதாரம் இப்பூமியினில் கால் ஊன்றும் நேரம் தற்பொழுது வந்துவிட்டது என மேலும் ஒரு கூடுதல் செய்தியினை தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் எடுத்துக்கூறுகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளையே கதி கலங்க வைக்கும் ஒரு மாபெரும் புயல் உருவாகி வருகின்றது என்றும், அந்த புயலின் தாக்கம், நாடுகளுக்கு இடையே மும்முனை தாக்குதலாக ஏற்படக் கூடும் என்று இன்றைய தீர்க்கதரிசனம் கூறுகிறது. இதுவே இன்றைய ”பத்தாவது தீர்க்கதரிசனம்” ஆகும்.

Friday 14 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி ( பகுதி - 9 )

   


 ”ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற தொடரில் வெளிப்படுத்தப்படும் ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, தீர்க்கதரிசனங்கள் என்றுமே பொய்த்ததில்லை, அவை நடைபெரும் காலகட்டங்கள் மட்டுமே சில மாறியுள்ளன.

     சென்ற வருடங்களில் “உலக அழிவு” என்ற தீர்க்கதரிசனத்தின் மேல் மக்கள் மிகுந்த ஆவல் கொண்டு இருந்தார்கள், அவர்கள் எதிர்பார்ப்புகள் ஏதும் நடக்காமல் போனதால், உடனே மக்கள் தீர்க்கதரிசனத்தின் மேல் இருந்த நம்பிக்கையை சற்று தளர்த்தி உள்ளனர், இதுவே உண்மையும் ஆகும், ஆனால் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை மக்கள் நன்கு உற்று நோக்க வேண்டும். 2000-ல், 2010-ல், மற்றும் 2012-ல் உலக அழிவு என்ற வார்த்தையில் உள்ள நம்பகத்தன்மையை சற்று ஆழமாக கவனிக்க வேண்டும்.

Wednesday 12 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி ( பகுதி - 8 )




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தொடரில் இன்று நாம் அறிய வேண்டிய முக்கிய நிகழ்வு ஒன்று உண்டு. அது வான் மண்டலத்தில் நிகழும் அதிசயங்களைப் பற்றி நமக்கு எடுத்துக் கூறுகிறது.

வான் வெளியில் பல பிரபஞ்சங்கள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால் இதுவரை அறிந்திடாத ஒரு பிரபஞ்சத்தை நமது விஞ்ஞானிகள் கண்டறிய உள்ளார்கள். அங்கு பல வியத்தகு ரகசியங்கள் உள்ளதை ஆதாரத்துடன் விஞ்ஞானிகள் வெளிப்படுத்த உள்ளார்கள். வானில் ஒரு மகா பேரொளி தோன்றி அந்த பிரபஞ்சத்தினுள் ஊடுருவிச் செல்வதை உலக விஞ்ஞானிகள் கண்டு வியப்பார்கள் என்றும், அச்சமயத்தில் அங்கிருந்து பறக்கும் தட்டுகள் வெளியேறி பூமியின் சுற்றுவட்டப் பாதையை நெருங்கும் காட்சியை கண்டு விஞ்ஞானிகள் வியப்படைவார்கள் என்பதே இன்றைய எட்டாவது தீர்க்க தரிசனம் உறுதிபட கூறுகிறது.

Monday 10 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி ( பகுதி - 7 )




“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு தீர்க்க தரிசனங்களும் மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக அல்ல! மக்கள் கடவுளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ வேண்டும் என்பதற்கே இங்கு வெளிப்படுத்தப் படுகின்றன.

உண்மைக்குள் ஒழிந்துள்ள தெய்வீக உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதே  ஆகாயத்தில் ஒரு ஒளி”  என்ற தொடரின் முக்கிய நோக்கமாகும். இங்கு வெளியிடப்படும் தீர்க்க தரிசனங்களைப் போன்று உலகில் பல மக்கள், பல மதத்தினர் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இத் தொடரில் இடம் பெறும் தீர்க்க தரிசனங்கள் யாவும் கடவுளின் வருகைக்கு முன்பாக இப் புவியில் மக்களுக்கு நடக்கும் சம்பவங்களை வெளிச்சமிட்டு காட்டுவதற்கே இங்கு வெளியிடப்படுகின்றன. ஆனால் விஞ்ஞானம் முழுவதையும் கண்டறியாது. அதே சமயத்தில் முழுமையாக மக்கள் அறிந்து கொள்ளும்படி அது வெளிப்படுத்தாது. அது அரசாங்கத்தின் முக்கிய கட்டுப்பாட்டு விதிமுறையாகும்.

Friday 7 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 6)



    



         ’ஆகாயத்தில் ஒரு ஒளி’ என்ற தீர்க்கதரிசனத்தின் தொடரில் இன்று விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் வெளியிடப்படுகிறது, அதாவது பூமியில் உள்ளது போன்று மற்ற கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி உலக நாடுகளின் மக்களுக்குள்ளும் ஒரு ஆச்சர்யமூட்டும் கேள்வியாக உள்ளது.


     இன்றைய ஆறாவது தீர்க்கதரிசனம் மனிதர்களின் உருவ அமைப்பை ஒத்த ஆனால் சில மாறுபட்ட அங்க அமைப்புகள் உடைய, ஆற்றலில் மேம்பட்ட சில ஜீவராசிகளும், மனிதனை போன்றவர்களும், பல கிரகங்களில் வசித்து வருகின்றனர் என்ற குறிப்பை இந்த தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது. அதாவது பூலோக அமைப்பில் உள்ள வட, தென் துருவங்களில் எங்கு அதிகமான உறைபனி உள்ளதோ அதன் நேர் ஒளிப்புள்ளி செல்லும் திசையில் சுற்றிவரும் வான்மண்டல கோள்களில் மனிதனைப் போன்ற வேற்றுகிரக வாசிகள் வாழ்ந்து வருவதாக இந்த தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது. அதுமட்டுமின்றி செவ்வாய், சனி, புளுட்டோ, சந்திரன் போன்ற கோள்களில் வேற்றுகிரகவாசிகள் வாழ்வதாக இந்த ஆறாவது தீர்க்கதரிசனம் ஒரு விளக்கத்தை தருகிறது. இவர்கள் பூமிக்கு பயணிக்கும் வழிமுறைகளை முழுமையாக அறிந்துவிட்டனர் என்றும், விரைவில் இப்புவியில் இவர்கள் நடமாடும் காட்சியை முழுமையாக இந்த மனித சமூகம் காணும் என்றும் தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது.

Wednesday 5 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 5)



     இவ்வுலகில் நடக்கும் அழிவுச் சம்பவங்கள் யாவும் அவைகள் தானாக நடக்கும் சம்பவங்கள் என்று மக்கள் நம்பி உள்ளனர், ஆனால் இதில் உண்மைகள் ஏதும் இல்லை. அச்சம்பவங்கள் யாவும் சில காரண, காரியங்களுக்காக நடத்தப்படுகின்றன, எதற்காக இவைகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

     நடக்கும் அனைத்து சம்பவங்களும் இந்த பூமியின்மீது இறைவன் நடத்தும் நியாயத்தீர்ப்புகளின் எதிரொளியே என்பதை நாம் இங்கு கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும், நியாயத்தீர்ப்புகள் என்றால் என்ன? மக்களின் மன நிலையிலும், வாழ்வியல் முறைகளிலும் ஏற்பட்ட ஒழுக்ககேடான செயல்களினால் தர்மத்தின் உண்மைநிலைகள் அடியோடு மாறிவிட்டன, அது மட்டுமின்றி பொய்யான வாழ்க்கை, கபடம், சூது, வஞ்சகம், கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்களால் இப்புவியின் இயக்க கோட்பாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன, இதனால் இப்புவியானது அழியும் சூழலுக்கு மிகவும் தள்ளப்பட்டுவிட்டன, இதனை சரி செய்ய வேண்டுமெனில் அதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மனித சமுதாயம் காண வேண்டும். ஆனால் அது சாத்தியமற்ற ஒரு செயலாகும். ஆகையால் இப்புவியை படைத்த இறைவன் அதனை சரி செய்திட விருப்பம் கொண்டு, அவரின் ஒழுங்கு நடவடிக்கையின் ஒட்டு மொத்த செயலுக்கே ”நியாயத்தீர்ப்புகள்” என்று இங்கு குறிப்பிடப்படுகின்றன.

Monday 3 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 4)

     ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரில் இடம் பெறும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இறைவன் வருகைக்கு முன்பாக மக்கள் அறிய வேண்டிய உலகியல் உண்மைகளாகும், தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் தீர்க்கதரிசனத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். உண்மையில் தீர்க்கதரிசிகளுக்கும், தீர்க்கதரிசனத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்களின் பிறப்பு, அவர்கள் வாழும் யுகம், அவர்கள் மூலம் இறைவன் வெளிப்படுத்தும் உண்மைகள், இவைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு யுக மாற்றத்தின் போதும் அவைகளை மனிதகுலம் கண்டறிந்து தெளிவடைய அவர்களுக்காக இப்புவியில் அவதாரம் செய்யும்படி இறைவன் மனித ஆத்மாக்களை அனுப்பி பிறவி காணச்செய்கிறார். அந்த ஆத்மாக்கள் மூலம் இறைவன் மக்களுக்கு தரும் புனித செய்திகளே பின்னாளில் மக்களால் தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இன்று ஒவ்வொரு மதமும் தனக்குள் தீர்க்கதரிசிகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளது, மன்னிக்கவும், மதத்தில் உள்ள மனிதர்களே தங்களை புனிதர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இந்த மதவாத தீர்க்கதரிசிகள், மற்ற சாதாரண மனிதர்கள் கூறும் தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பொதுவாக அவர்கள், இவர்களை “கள்ள தீர்க்கதரிசிகள்” என்று அடையாளமிட்டு புறம் தள்ளுவார்கள். மனிதனுக்குள் கடவுள் பேதம் பார்ப்பதில்லை, ஆனால் கடவுள் நிலைகள் என்று மனிதன் சிலவற்றை வரையறுத்து அதில் தனது சுய நலத்திற்காக பேதம் பார்க்கின்றான், இன்று இது ஒரு சுயநலத்தின் அரிச்சுவடியாகவே மாறிவிட்டதை மக்கள் சமுதாயம் காணலாம். கள்ளத் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்? இவர்களின் சுயலாபம் என்ன? மக்கள் இந்த தீர்க்கதரிசிகளின் பேதத்தில் மறைந்துள்ள உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே எது உண்மையான நிலை? என்று அறிந்த கொள்ளமுடியும்.