Friday 27 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 10)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 10)
(பத்தாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 10-ம் பகுதியாகும். இது பல்வேறு குறிப்புகள் அடங்கிய தீர்க்கதரிசனப் பகுதியாகும்.


    இந்த 10-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கத்தரிசனம் என்னவெனில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றங்கள் 90% இருக்கும் எனவும், இது வடதமிழகம், தென்தமிழகம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் புயல், மழை, சூறாவளிக் காற்று, கடல் சீற்றம் என இருக்கும்படி அமைய உள்ளதாக இந்த 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

Friday 20 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 9)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 9)
(ஒன்பதாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 9-ம் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் யாவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.


    9-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் “மயிலாடுதுறை“ மக்களின் கவனத்தை ஈர்க்க உள்ளதாகவும், அங்கு உள்ள ஒரு ஆன்மீக அமைப்பில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இருப்பதாகவும், சித்தரை 18-ம் நாளிலிருந்து இந்த சம்பவங்கள் துவங்கிட உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

Friday 13 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 8)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 8)
(எட்டாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 8-ம் பகுதியாகும். இந்த 8-ம் தீர்க்கதரிசனத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. அவைகளைப் பற்றி இங்கு காண்போம்.

    இந்த 8-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் உலகத்தின் முக்கிய பிரசித்திப் பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய நினைவிடங்களில் ஒன்று, உலக தீவிரவாதிகளால் முழுமையாக அழிக்கப்பட உள்ளது என்றும், இது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முக்கிய நிகழ்வாக அமைய போவதாகவும், இதனால் உலக நாடுகள் அச்சமடையும் ஒரு தீவிரவாத செயலாக இருக்குமென 8-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு குறிப்பை தருகிறது.

Friday 6 April 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 7)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 7)
(ஏழாம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகத்தின்“ 7-ம் தீர்க்கதரிசனத்தின் முக்கிய பகுதிகள் இன்று வெளிப்படுத்தப்படுகின்றன.

    இந்த 7-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் இந்திய வான் பகுதியில் தோன்றும் சில வினோதமான உருவங்களினால் மக்கள் ஆச்சர்யங்களையும், பயத்தினையும் சுமந்த மனநிலையில் இருக்கும்படியான ஒரு அதிசய சம்பவம் உடனே நடக்க இருப்பதாகவும், இது இந்திய மண்ணில் இயேசுவின் வருகைக்கான அறிவிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமென 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.