Friday, 19 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 24)



                ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தொடரில் இடம்பெறும் தீர்க்கதரிசனங்களின் செயல்முறைகள் வேகம் கொள்ளக்கூடிய அளவில் அதன் உண்மைத்தன்மைகள் திகழ உள்ளதாக இறைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

                மனித வரலாற்றில் எத்தனையோ காவியங்கள் இருந்தாலும், இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவை இறைவனின் திருவிளையாடல்களும், அவரின் பல்வேறு அற்புதங்களும் ஆகும். அந்த வகையில் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் மாற்றக்கூடிய ஒரு              யுகமாற்றம் பூமியில் நிகழ உள்ளதாக இன்றைய 24-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. அற்புதம் ஒன்று இந்த பூமியில் நிகழ உள்ளதாகவும் பரம்பொருளான அந்த பரமாத்மா இந்த பூமியில் அவதாரம் எடுக்கும் திருநாள் வந்துவிட்டதாக 24-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.


              
      இந்திய தேசத்தில் மட்டுமே நடக்ககூடிய அந்த மகா அதிசயம் பிரபஞ்சம் முழுவதும் தனது ஆளுமையை செலுத்தக்கூடிய அளவில் இருக்கும் என 24-ம் தீர்க்கதரிசனம் மேலும் பல விபரங்களைத் தருகிறது.

             இறைவன் அவதரிக்கும் நமது இந்தியப்பூமி என்ன தவம் செய்ததோ என்று ஞானிகளும், யோகிகளும், மகான்களும், மக்களும் வியந்து நிற்கும் இச்சமயத்தில் அந்த இறைவனின் அவதாரம் வெகு நேர்த்தியாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்று 24-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

               தீர்க்கதரிசனம் மேலும் பல விளக்கங்களை தருகிறது. இந்த உலகத்தில் பெரும்பான்மையான இறை அவதாரக்கோட்பாடுகள் இந்திய மண்ணில் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றும், இது இறைவன் விரும்பி ஏற்கும் இடம் என்றும், உலக வரலாற்றில் இது போன்ற அதிக அவதாரப்புராணங்கள் வேறு எங்கும் நிகழ்ந்ததாக உலக வரலாற்றில் எவ்வித குறிப்புகளும் இல்லை என 24-ம் தீர்க்கதரிசனம் மேலும் விளக்கங்களை தருகிறது. உலகில் தனக்கென ஒரு இடத்தை விருப்பமாக தேர்வு செய்யும் இறைவன் அதற்கான காரண, காரியங்களை முன் வைத்துள்ளார் என்றும் 24-ம் தீர்க்கதரிசனம் பல குறிப்புகளை தருகிறது.

                உலக வரலாற்றில் புண்ணிய இடமாக கருதுவது இந்தியதேசம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும், இந்த புண்ணிய ஷேத்திரத்தில்தான் பல ரிஷிகளும், பல முனிவர்களும், பல சித்தர்களும், பல அவதார புருஷர்களும், கடவுளின் திருவிளையாடல்களும் நிகழ்ந்து உள்ளது என்றும், அதனால் இறைவனின் வருகை என்பது இந்திய தேசமே என்பது எப்பொழுதே எடுக்கப்பட்ட முடிவு என்று 24-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

                கடவுளின் வருகை என்பது யுக மாற்றத்தின் முக்கிய நிகழ்வு என்றும், அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பார் என்பதற்கு நிதர்சனமாக விடை இல்லை என்றும், அவர் மானிட வடிவத்தினுள் வாழும் கடவுளாகவே வருகை தருவார் என்றும், இதனை உலக மக்கள் அறிய வேண்டிய உண்மை என்றும் 24-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது.

                இயேசுவின் வருகையும் உலகில் நடக்கும் பல அதிசயங்கள்கூட இறைவனின் வருகை கட்டாயம் என்பதற்கான அரிச்சுவடிகளாக அமையுமே என்று 24-ம் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகின்றது. ஏழை, பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன், அரசன், ஆண்டி, யோகி, ஞானி, மகான், பேதை என்ற எவ்வித வேறுபாடுகளும் அவருக்கு இல்லை என்றும், மதத்துக்குள் மறைந்து வாழும் நிலை அவருக்கு இல்லை என்றும் எல்லாவித மார்க்கங்களும் அவரையே சரணாகதி அடையும் என்றும் 24-ம் தீர்க்கதரிசனம் மேலும் விளக்கத்தை தருகிறது.

                கற்கால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை அனைவருக்கும் கடவுள் ஒருவரே. அவர் தனது உருவ அமைப்பையும், வழிகாட்டுதல் முறைகளையும் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்திக் கொண்டவரே தவிர, அவர் வெவ்வேறான கடவுளின் அம்சம் கொண்டவர் என சொல்லிவிட முடியாது என்றும், தண்ணீரை வெவ்வேறு பாத்திரத்தில் நிரப்பும் போது அந்த பாத்திரத்தில் உள்ள நீர் என்று எப்படி பெயரிட்டு சொல்கிறமோ அது போன்று அனைத்து உருவங்களிலும், மதத்திலும் உள்ள எவரோ அவரே உண்மையான கடவுள் என்றும், இவ்வுலகில் போலியான கடவுள் என்று இதுவரை இல்லை என்று 24-ம் தீர்க்கதரிசனம் ஒரு மிகப்பெரிய விளக்கத்தை இங்கு தருகிறது.
 
                துன்பத்தை விலக்கிட கடவுள் வருவார் என்பதைவிட நம்மை காப்பாற்ற கடவுள் வருவார் என நினைப்பதே இந்த நேரத்தில் சிறந்த கோட்பாடு என்றும், அகிலம் முழுவதும் ஆளும் திறன் இறைவன் ஒருவருக்கே உண்டு என்றும், இறைவனை அங்கீகரிப்பது, நிராகரிப்பது என்ற செயல்கள் மனிதகுலத்தில் காணப்பட்டாலும், மனிதகுலத்தை என்றுமே கடவுள் நிராகரிப்பதில்லை என 24-ம் தீர்க்கதரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்


குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment