Friday 23 June 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 8)

உண்மைகள் உறங்குவதில்லை
(8-ம் தீர்க்கதரிசனப் பகுதி)

     “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற  இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெற உள்ள தீர்க்கதரிசனப் பகுதி 8-ம் பகுதி ஆகும். இது பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாக இங்கு வெளிப்படுத்தப்பட உள்ளது.


    அதாவது இன்று இடம்பெறும் 8-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக இடம்பெற உள்ள தீர்க்க தரிசனம் என்னவெனில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்கதரிசனத்தில் நாம்  வெளியிட்டுள்ள 31-ம் தீர்க்கதரிசனத்தை நாம் முழுமையாக நினைவில்  கொள்ள வேண்டும் எனவும், இச்சமயத்தில் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய பூமி திரட்டு ஒன்று தஞ்சையில் கண்டெடுக்கப்பட உள்ளதாக 8-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


   
       மர்மங்கள் பல நிறைந்த ஒரு கோவிலைப் பற்றிய சிறப்பு கண்ணோட்டம் ஒன்று தொலைக்காட்சியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படும் சமயத்தில், திருச்சிக்கு அருகே உள்ள ஒரு மலைக் குன்றில் ஒரு மகா அதிசயம் நடக்க உள்ளதாகவும், அந்த நிகழ்வு ஒரு சித்தரால் நடத்தப்படும் அதிசய நிகழ்வு என்றும், இது நடக்கும் காலம் மிக அருகில் உள்ளது என 8-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.

 

    புயல் ஒன்று தோன்றி கரையை கடக்கும் சம்பவம் இன்னும் ஒரிரு நாளில் துவங்கும் என்றும், அச்சமயத்தில் வடலூரில் ஒரு அதிசய சம்பவம் ஒன்றை ஒரு சித்தர் நிகழ்த்துவார் என்றும், இச்சம்பவத்தால் மக்கள் பெரிதும் ஆச்சர்யப்படுவார்கள் என்றும், இது நிகழும் நாட்களிலேயே தமிழகத்தில் உள்ள ஒரு சிவாலயத்தின் கருவறை  இடிந்து விழும் ஒரு சோகச் சம்பவம் நடக்க உள்ளதாகவும், இச்சம்பவம் நடைபெற்றால் நாட்டிற்கு சோதனைக் காலமாக எடுத்துக் கொள்ள  வேண்டும் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கையை இங்கே குறிப்பிடுகிறது.


    “இனி வானில் ஒளிக்கீற்றுகள், ஒளிவடிவ பந்து சுழற்சிகளை மக்கள் காணும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதுவே ஒளி வடிவலான விண்ணுலகவாசிகள் பூலோகத்திற்கு வருவதற்கான முன் அறிவிப்புகள் என்று 8-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.


    கன்னியாகுமரி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், இம்மாதம் முதல் அடுத்த மாதம் 30ந் தேதி வரை அங்கு பல சோகச் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சப்படுவார்கள் என்றும், இச்சம்பவங்கள் யாவும் தமிழகம் “மிகுந்த ஆபத்து“ என்ற வட்டத்தை நோக்கி செல்ல உள்ளதாகவும் இதுவே அதற்கான அறிகுறி என்று 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

 

    காலம் சென்ற பல மகா தவசிகளின் ஆன்மாக்கள் வரும் ஒரு பௌர்ணமி அன்று  கொல்லி மலையில் கூடி தவமியற்றும் ஒரு அரியச் சம்பவம் நடக்க உள்ளதாகவும் அன்று வானில் மேக மூட்டத்துடன் ஒரு ஒளி, மிகுந்த வெளிச்சத்துடன் காட்சி அளிக்கும் என்றும், இந்த சம்பவம் நடைபெறும் தினம் சித்தர்களின் ராஜ்யம் இந்த பூமியில் துவங்கும் முதல் நாளாக மக்கள் தமது பூமி கணக்கில் கொள்ள வேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு பிறகு சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக் கோவில்களில் பல அதிசய சம்பவங்கள் நடக்க உள்ளதாக 8-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.


    வரலாற்று சிறப்புமிக்க ஒரு தென் தமிழக சிவாலயத்தில் மிகப்பெரிய சோகச் சம்பவம் ஒன்று நடக்க உள்ளதாகவும் இதற்கு ஒரு அமைப்பு காரணமாக அமையும் என்றும் 8-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.


    தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் மதிகெட்ட ஒருவர் திடீரென்று மனம் மாற்றம் கண்டு பதிகை பாடி பல குறிப்புகளை கூறுவார் என்றும், அவரை ஒரு ஆன்மீக அமைப்பு தன்னோடு இணைத்துக் கொண்டு மக்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சி ஒன்று தற்போது துவங்கிட உள்ளதாகவும், அச்சமயத்தில் நமது “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற தீர்க்கதரிசனத்தின் 14-ம் பகுதி நடக்க துவங்கும் காலமாக இக்காலம் அமையும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கு பதிவுச் செய்கிறது.


    மூன்றாம் பிறை காணும் நிகழ்வின் போது மெக்காவில் ஒரு மிகப்பெரிய சோகச் சம்பவம் நடைபெற உள்ளதாகவும் முஸ்லீம் இனத்தவர்களுக்கு இது ஒரு மகாசோகச் சம்பவமாக தங்களுக்கு அமைந்து விட்டது என  நினைத்து வேதனை அடையும் காலமாக தற்போது உள்ளது என்றும், இதன் பிண்ணனி என்னவென்று உலக முஸ்லீம் அமைப்புகள் ஆய்வார்கள் என்றும் 8-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    கிறிஸ்துவ மதத்தில் உள்ள ஒரு இந்து சாமியார் ஒரு அறிக்கையை திடீரென்று ஒரு தொலைக்காட்சியில் வெளியிடுவார் என்றும், அச்சமயத்தில் “பாலஸ்தீன“ நாட்டில் ஒரு மகா கொடூரச் செயல் நடக்கும் என்றும், கிறிஸ்துவர்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்கும் ஒரு செயலாக இது இருக்கும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    “உண்மைகள் உறங்காது“ அது எப்பொழுதுமே மக்களுக்கு நிகழ்வுகளை வெளிச்சமிட்டு காட்டும் என்றும், அந்த வகையில் இந்த 8-ம் தீர்க்கதரிசனத்தில் நாம் அறிந்து கொள்ள இருப்பது “தஞ்சை பிரகதீஸ்வரர்“ ஆலயத்தின் தென்பகுதியில் திடீரென்று ஒரு பள்ளம் ஏற்படும் என்றும், இதிலிருந்து பல மகா இரகசியங்கள் வெளிப்படும் என்றும், அடுத்து இந்த உலகத்தை வழி நடத்தும் அந்த நபரை பற்றிய இரகசியங்கள் அங்கு கிடைக்கப் பெற உள்ளதாக 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


    “காயிதேமில்லத்“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பகுதி என்றும், அங்கு பூமி வெடிப்பு ஒன்று தற்போது நிகழ உள்ளதாகவும், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், இச்சமயத்தில் பூமியின் அதிர்வானது “பாகிஸ்தானில்“ மிகுந்த பாதிப்பை உருவாக்கி இருக்கும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    “சுந்தரனார்“ எனும் சிவனடியார் பற்றிய இரகசியங்கள் இனி தமிழகத்தில் வெளிப்பட உள்ளதாகவும், அது தர்மத்தின் விடியல் என மக்கள் பேசிக் கொள்ளும் அளவிற்கு இச்சம்பவம் அமைய உள்ளதாக 8-ம் தீர்க்கதரிசனம் நால்வரில் ஒருவரின் இரகசியத்தை அம்பலப்படுத்தும் என 8-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.


    வரும் தை மாதம் அன்று தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஒன்று நடக்க உள்ளதாகவும், “ஆன்மீகம்“ தனது அங்கத்தை அரசியலில் வகிக்கும் சம்பவமாக உலக மக்கள் இதனை கருத வேண்டும் என்றும், நடிகர்கள் பலர் இதனுள் புக ஆரம்பிக்கும் பல சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், வருபவன் ஆனந்த்த்தில் இருக்கும் போது, அவனின் மரணம் அரசியலில் மற்றொரு புதிய சகாப்த்த்தை ஏற்படுத்தும் என்றும் இது நிகழ்வதற்கு பல காலம் ஆகும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.

    “ஆண்டவர் வருகையால் அகிலமும் செழிக்கும்“ என்ற கூற்றை இந்த தீர்க்கதரிசனத்தின் வாயிலாக நமது “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனம் தனது கருத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்து பெருமை கொள்ளும் நிகழ்வை காண நாம் காத்திருப்போம்.

--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்



குறிப்பு :-

இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.

No comments:

Post a Comment