ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 13)
(பதிமூன்றாம் தீர்க்கதரிசனம்)
சத்திய யுகம் (பகுதி 13)
(பதிமூன்றாம் தீர்க்கதரிசனம்)
“ சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 13-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் குறிப்புகளும், கருத்துக்களும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.
13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் “மக்களால் நான், மக்களுக்காக நான்“ என்ற முன்னாள் தமிழக முதல்வரின் மிக அருமையான ஒரு சொர்க்கம் போன்ற இரகசியம் ஒன்று தற்பொழுது கண்டறியப்பட்டு, மக்கள் அறியும்படி ஒரு ஊடகம் செய்தியை வெளியிடும் என்றும், அது ஒரு உயில் சாசனமாக இருக்கும் என்பதே இன்றைய தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவம் என முதலாம் தீர்க்கதரிசனம் குறிப்பை தருகின்றது.
13-ம் தீர்க்க தரிசனத்தில் நாம் அடுத்ததாக தெரிந்து கொள்ள இருக்கும் குறிப்பு என்னவெனில் “அரசியல் அணிகளை“ ஒன்றிணைத்து நடிகர்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு தடுப்பு சுவராக ஒரு புதிய அணியை உருவாக்க சில அரசியல்வாதிகள் முயல்வார்கள் என்றும், அந்த அணியை தமிழக ஆன்மீகவாதி ஒருவர் தன்பக்கம் இழுக்க பல முயற்சிகளை மேற்க்கொள்ளும் சம்பவம் ஒன்று தற்போது நடைபெறும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
“உறவுகள் எப்பொழுதும் உண்மையாக இருக்காது“ என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு குடும்ப அரசியல் பிண்ணனி கொண்ட ஒருவரின் தனிப்பட்ட பிரவேசம் அரசியலில் ஒரு திருப்புமுனையாகவும், திடுக்கிடும் ஒரு சம்பவமாக அமைய உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
“திருமண உறவுக்குள் உள்ள பந்தங்கள் என்பவை வெறும் உறவுகள் மட்டுமே என்பதற்கு ஏற்ப நடிகரின் அரசியல் பிரவேசத்தில் மருமகனுக்கும், மாமனாருக்கும் ஒரு புதிய கருத்து வேறுபாடு, சர்ச்சை ஒன்று உருவாகும் என்றும், இதனால் இரு குடும்ப உறவுகளில் பல பிரச்சனைகளும், சச்சரவுகளும் ஏற்பட உள்ளது என்றும், அதனால் மாமனார் நடிகர் தனது அரசியல் பிரவேசத்தில் ஒரு நிம்மதியற்ற நிலையை எதிர்கொள்ளும் சூழ்நிலை தற்போது உருவாகி வருவதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.
“மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு மழை வெள்ளம் பெருத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளதாகவும், அதே சமயத்தில் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, பூடான் போன்ற தேசங்களும் புயல், மழையால் சேதங்களை சந்திக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட இங்கே எடுத்துக் கூறுகிறது.
பனிப்புயலுக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பெரும் சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், அதே சமயத்தில் “வியட்நாமில்“ பெரும் வெள்ளத்தினால் மக்கள் இறக்க நேரிடும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இனி செய்தி ஊடகங்களில் வினோதமான செய்திகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் என்றும், வடமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்கள் மற்றும் பிற ஆலயங்கள் யாவும் இயற்கையின் சீற்றத்தால் சிதலமடைந்து அழிந்து போகும் சம்பவங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்கும் என்றும், வடதேசத்திற்கு இனி இந்திய மக்கள் மட்டுமின்றி பிறதேசத்து மக்களும் புனித பயணம் மேற்க்கொள்ள மாட்டார்கள் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
சீன தேசத்தில் புகழ்பெற்ற குங்ஃபூ கலையானது இனி தமிழகத்தில் தனித்துவமான வளர்ச்சியையும், புகழையும் அடைய உள்ளதாகவும் அதற்கு போதிதர்மனின் மறுபிரவேசம் ஒரு காரணமாக அமைவதோடு, புத்த மகானின் மறுபிரவேசம் இந்த இந்திய தேசத்தில் உடனே நடக்க இருப்பதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
“குற்றாலம்“ இனி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு இறைவனின் பிரவேசம் எம்மிடத்தில் நிகழ்ந்துள்ளது என ஒருவன் அறைகூவல் விடுவான் என்றும், “அவன் ஒரு போலியான ஆசாமி“ என்பது பிறகே தெரியவரும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
சென்னையில் ஒரு நள்ளிரவில் பயங்கரவாத செயல் ஒன்று நடந்து முடியும் என்றும், இது வடதேச தீவிரவாத அமைப்பின் செயலாக இருக்கும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.
வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை இவை மூன்றும் வரும் புயல் மழையினால் பெருத்த சேதங்களை சந்திக்கும் என்றும், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு கடும் எச்சரிக்கையை இங்கே பதிவு செய்கிறது. வானிலை மையங்களும் தகுந்த எச்சரிக்கைகளை முன்னெச்சரிப்பார்கள் என 13-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.
இறைவன் வெளிப்படும் அந்த இறுதிசபை தமிழகத்தில் உள்ளது என்றும், மக்களோடு மக்களாக அந்த இறுதிசபை தற்போது செயல்பட்டு வருகிறது என்றும், அந்த இறுதிசபையே இறைவனின் உண்மையான “திருநாமத்தை“ உச்சரித்து வணங்கி வருவார்கள் என்றும், மற்ற சபைகள் எல்லாம் இறைவன் அவதாரம் எடுக்கும் சபை தன்னுடைய சபையாக எண்ணி பூஜை, புனஸ்காரம், கூட்டம் என நடத்தி வருவார்கள் என்றும், அவர்கள் தமது சபையில் சித்தர்கள் வெளிபட்டு மகிமைகளை செய்து வருவதாக தற்போது அறிக்கைகளை வெளியிடுவார்கள் என்றும், இறைவன் அவதாரம் கொள்ளும் நிலையானது ஆணா அல்லது பெண்ணா என்றுகூட அவர்களுக்கு தெரியாது என்றும், அது சிவமா, விஷ்ணுவா, முருகனா, அம்மனா, இயேசுவா என்றுகூட அறியாதவர்கள் என 13-ம் தீர்க்கதரிசனம் தனது கூற்றை இங்கே மெய்பட கூறுகிறது.
இறைவன் அவதாரம் கொள்ளும் அந்த இறுதிசபையில் உள்ளோர்கள் எளியவர்கள் என்றும், ஆனால் வலிமை படைத்தவர்கள் என்றும், அந்த சபை மலைகள் சூழ்ந்த அமைப்பில் இருக்கும் என்றும், தென் தமிழகத்தின் ஆரம்ப நிலையில் அது அமைந்திருக்கும் என்றும், இன்னும் விரிவாக கூற வேண்டுமெனில் “மாங்கனி“ எனும் மாவட்டமே அது என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கூற்றை இங்கே பதிவு செய்கிறது.
கொல்லிமலையில் சித்தர்களின் நடமாட்டம் இனி அதிகமாக மக்களின் கண்களுக்கு தெரியவரும் என்றும், இதனை படம்பிடிக்க பல தமிழ் ஊடகங்கள் படை எடுக்கும் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.
நாம் வெளியிடும் இந்த 13-ம் தீர்க்கதரிசனம் நாள் அன்று தமிழகத்தில் ஒரு சம்பவம் மாலையும், இரவும் கூடும் சமயத்தில் நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. அது நடக்கும்போது மக்கள் அதன் உண்மையை நிச்சயம் அறிந்து கொள்வார்கள் என 13-ம் தீர்க்கதரிசனம் மீண்டும் இங்கே அதனை நினைவுப் படுத்துகின்றது. அன்றுமுதல் நமது தீர்க்கதரிசனங்கள் உலக மக்கள் அறிந்து கொள்வார்கள் என 13-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
தமிழகத்தில் மழைநீர் இனி ஆறாக பாய்ந்து ஓடும் என்றும், காவேரி எனும் பிரச்சனை இனி மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தாது என்றும், இது இறைவனின் நற்கருணைக்கு ஒரு சான்றாக தமிழக மக்கள் எண்ண வேண்டும் என 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட இங்கே தெரிவிக்கின்றது.
“துன்பம்“ என்பது இறைவன் தரும் தண்டனை என மக்கள் நினைத்தாலே அவர்களின் துன்பம் விலக ஆரம்பித்துவிடும் என்றும், மக்களின் மனதில் இனி இறை நம்பிக்கைகள் துளிர்விடும் காலமாக இனி இக்காலம் இருக்கும் என 13-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
“அன்னையர் தினம்“ என்ற தினத்தில் ஒரு யோகா அமைப்பு தனது விஸ்தரிப்பை நிர்ணயம் செய்ய மக்கள் கூட்டத்தை நடத்தியது என்றும், அச்சபையின் அசுர வளர்ச்சி வரும் பௌர்ணமி அன்று முதல் துவக்கம் என்றும், இதுவே இறைவன் வரும் இறுதிசபையின் அடையாளம் என்றும் 13-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை மெய்பட எடுத்துக் கூறுகிறது.
“உண்மைகள் உறங்காது, அது ஒருநாள் விழிப்படையும்“ என்ற கூற்றுக்கு ஏற்ப இறைவனின் அவதாரச் செய்திகளை தனது இரகசியங்களாக கொண்ட அந்த இறுதிசபையை தற்போது மக்கள் நன்கு அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும், அது உடனே நடக்க கூடிய விதி என்று 13-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை மெய்பட பதிவு செய்கிறது.
“கலியுகக் கடவுளான“ ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவின் புனித ஆத்மா அந்த இறுதிசபையின் மீது மறுபிரவேசம் மேற்க்கொள்ளும் என்றும், இதுவே இறைவனின் அற்புதம் ஒன்று பூமியின் மீது இறங்கிட உள்ள அதிசயம் என்றும், அது நடக்கும் தினம் மிக, மிக அருகில் உள்ள தினம் என்றும், அது கிருஷ்ணனின் புண்ணியமிக்க அவதார திருநாள் அன்று நடைபெறும் என்றும், அதனை எவராலும் அறிய முடியாது என்றும், ஆனால் அந்த இறுதிசபையில் அன்று முதல் அதிசயங்கள் “பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக“ இருக்கும்படி பல நிகழ்வுகள் நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
“திரித்துவ தத்துவம்“ உயிர்பெறும் உன்னத நாள் மிக விரைவில் உள்ளது என்றும், உலகம் அதற்காகவே காத்து உள்ளது என்றும், இனி அந்த நாளை மக்கள் உணர்ந்து அறியும்படி பல நல்ல சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
ஆகாயத்தில் ஒளி அகிலம் எங்கும் பரவும் இவ்வேளையில் இறைவனின் கருணை இப்பூமியின் மீது இறங்கும் இத்தருணத்தில் அவரை வரவேற்க காத்திருப்போமாக.
--யுகம் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக்குறிப்புகள் அனைத்துமே நடைபெறும். மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment