உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 13 -ம் பகுதி)
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்கதரிசனப் பகுதி 13-ம் பகுதி ஆகும். இந்த 13-ம் பகுதி பல நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். அவைகளைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.
13-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக இடம் பெறும் குறிப்பு என்னவெனில் “நாடாளும் மன்னன் ஒருவனின் இராஜ்யம்“ அவன் கைகளை விட்டு விலகிச் செல்லும் என்றும், ரோம் நாட்டில் நடைபெறும் ஒரு பெரும் புரட்சி இதற்கு வித்தாக அமையும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு நமக்கு தெரிவிக்கின்றது. யுதர்களின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் அளவிற்கு இப்புரட்சி அமையும் என்று இந்த தீர்க்கதரிசனம் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றது.